உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பாரத் மாதா கி ஜே என முழக்கமிடுவார்களா? உமர் அப்துல்லா கேள்வி

ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் 2 மாதங்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்து உள்ளது. மெகபூபா ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா கட்சியும் தனது ஆதரவை தெரிவித்தது. நாளை (4-ம் தேதி) புதிய அரசு பதவியேற்கிறது. பதவியேற்பு விழாவிற்கு முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முதல்-மந்திரியாக பதவியேற்ற பின்னர் பாரதிய ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியினர்  ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கூறியுள்ளார். ”ஜம்மு காஷ்மீரில் பாரதீய ஜனதா –  மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி அமைத்த பின்னர் இருகட்சியை சேர்ந்த உறுப்பினர்களும்  ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிடுவார்கள் என்பதை பார்க்க எதிர்நோக்கி உள்ளேன்,” என்று டுவிட்டரில் உமர் அப்துல்லா குறிப்பிட்டு உள்ளார்.

மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ‘பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட முடியாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியநிலையில் அதற்கு பதில் அளித்துள்ள உமர் அப்துல்லா இக்கருத்தை பதிவுசெய்து உள்ளார்

Related posts

5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவில்லை! அரசாங்க பல்கலைக் கழகங்களில்

wpengine

அணு ஆயுத ஒப்பந்தம்! 60நாற்களில் ஈரானுக்கு பொருளாதார தடை

wpengine

சமுகவலைத்தளத்தில் பிரதமர் உடன் சண்டை போடும் நாமல் ராஜபக்ச

wpengine