உலகச் செய்திகள்பிரதான செய்திகள்விளையாட்டு

ஆஸ்திரேலிய பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஊதிய உயர்வு

இந்தியாவில் சமீபத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது.

அப்போட்டியில் ஆஸி மகளிர் அணியினர் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.

இறுதி ஆட்டத்தில் அவர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வியடைந்தனர்.

எனினும் இறுதி ஆட்டம்வரை வந்து சிறப்பாக ஆடிய இந்த வீராங்கனைகளுக்கு 76,000 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான ஊதியம் கிடைக்கவுள்ளது.

இது ஆஸ்திரேலியாவிலுள்ள மற்றைய மகளிர் அணிக்கு கிடைக்கும் ஊதியத்தைவிட அதிகம்.

இந்த முன்னெடுப்பை டிவிட்டர் மூலம் வரவேற்றுள்ள பிரதமர் மால்கம் டர்ண்புல், மகளிர் அதிகாரம் வலுவூட்டப்பட்டால், அதன் மூலம் முழு பொருளாதாரமும், சமூகமும் பலனடையும் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

தாருஸ்­ஸலாம் சொத்து விபரங்களை இன்னும் வெளியீடாத ஹக்கீம் – பஷீர் சேகு­தாவூத்

wpengine

நாகப்பட்டினம் – காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

Editor

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஷாபியின் இலவச கத்னா

wpengine