Breaking
Tue. May 7th, 2024

இந்தியாவில் சமீபத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது.

அப்போட்டியில் ஆஸி மகளிர் அணியினர் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.

இறுதி ஆட்டத்தில் அவர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வியடைந்தனர்.

எனினும் இறுதி ஆட்டம்வரை வந்து சிறப்பாக ஆடிய இந்த வீராங்கனைகளுக்கு 76,000 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான ஊதியம் கிடைக்கவுள்ளது.

இது ஆஸ்திரேலியாவிலுள்ள மற்றைய மகளிர் அணிக்கு கிடைக்கும் ஊதியத்தைவிட அதிகம்.

இந்த முன்னெடுப்பை டிவிட்டர் மூலம் வரவேற்றுள்ள பிரதமர் மால்கம் டர்ண்புல், மகளிர் அதிகாரம் வலுவூட்டப்பட்டால், அதன் மூலம் முழு பொருளாதாரமும், சமூகமும் பலனடையும் எனத் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *