பிரதான செய்திகள்

தனியாரிடம் இரத்த பரிசோதனை செய்வதற்கு தடை

அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்கள், தனியார் பிரிவுகளில் இரத்த பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் தடைசெய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

இதற்கமைவாக, ஆய்வுகூடங்கள் இருக்கும் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் இரத்த பரிசோதனை உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படும் நோயாளர்கள் தனியார் பிரிவுகளில் இரத்த பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும்,

எனினும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறவரும் நோயாளிகள் தனியார் பிரிவுகளில் இரத்த பரிசோதனை செய்து கொள்வதை நிறுத்த முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சேதனப் பசளைத் திட்டம் தற்போது நெருக்கடியாக இருந்தாலும் விரைவில் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும்

wpengine

அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

Editor

மு.கா. கட்சியினை விமர்சிப்பதற்கு அமைச்சர் ரிஷாட் எந்த அருகதையும் கிடையாது.

wpengine