Breaking
Sun. May 19th, 2024

வடக்கில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்­வரன் எதைப் பேசினாலும் அவருக்கு எதி­ராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. வடக்கு தனியொரு பிராந்தியமாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்­கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்த­தாவது:

தற்காலத்தில் இலங்கையில் பல அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள். எந்தவொரு நாட்டுக்கோ அல்லது நிறுவனத்துக்கோ ஒழுங்கான தலைமைத்துவமொன்று இல்லாதபோது அந்த நாடும் நிறுவனமும் அழிந்து போய்விடும்.
இன்று இலங்கையிலும் அரச தலைவர் மைத்­திரிபால சிறிசேனவுடன் மேலும் பல தலைவர்களும் உள்ளனர்.

தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க­வும், அமைச்சர்களான ராஜித சேனாரத்ன­வும், மங்கள் சமரவீரவும் நாட்டின் தலைவர்­கள் போலத்தான் இருக்கின்றார்கள்.

மறுமுனையில் வடக்கில் விக்னேஸ்வரன் எதைப் பேசினாலும் அவருக்கு எதிராக வழக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. வடக்கு தனியொரு பிராந்திய மாகமாறி­யுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *