பிரதான செய்திகள்

விக்னேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை! தனியாக செயற்படுகின்றனர்.

வடக்கில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்­வரன் எதைப் பேசினாலும் அவருக்கு எதி­ராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. வடக்கு தனியொரு பிராந்தியமாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்­கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்த­தாவது:

தற்காலத்தில் இலங்கையில் பல அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள். எந்தவொரு நாட்டுக்கோ அல்லது நிறுவனத்துக்கோ ஒழுங்கான தலைமைத்துவமொன்று இல்லாதபோது அந்த நாடும் நிறுவனமும் அழிந்து போய்விடும்.
இன்று இலங்கையிலும் அரச தலைவர் மைத்­திரிபால சிறிசேனவுடன் மேலும் பல தலைவர்களும் உள்ளனர்.

தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க­வும், அமைச்சர்களான ராஜித சேனாரத்ன­வும், மங்கள் சமரவீரவும் நாட்டின் தலைவர்­கள் போலத்தான் இருக்கின்றார்கள்.

மறுமுனையில் வடக்கில் விக்னேஸ்வரன் எதைப் பேசினாலும் அவருக்கு எதிராக வழக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. வடக்கு தனியொரு பிராந்திய மாகமாறி­யுள்ளது.

Related posts

சிலாவத்துறையில் முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைக்கான இலவச கருத்தரங்கு

wpengine

மித்தெனிய மூன்று கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் ஒருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது.!

Maash

ஒட்டமாவடி பிரதேச சபையின் ஊழல் மிக விரைவில் வெளிவரும் பிரதி அமைச்சர் அமீர்

wpengine