பிரதான செய்திகள்

‘கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும்’ – கஜேந்திரகுமார்!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பல பிரதேச செயலகங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன. எனினும், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் செயற்பாடுகள் தொடர்ந்தும் தாமதமாகின்றன.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதாலா கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்த தாமதமாகின்றமைக்கான காரணம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழப்பு . .!

Maash

அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை ஆய்வு கூடத்தை திறந்து வைத்த இராஜாங்க அமைச்சர்.

wpengine

மக்கள் ஆணையை வெற்றிபெற செய்வது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை

wpengine