Breaking
Fri. May 3rd, 2024

பாறுக் ஷிஹான்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பாரிய வெற்றியைப் பெற்று இந்த நாட்டை ஆட்சி செய்யும் என தெரிவித்தார்.
  அம்பாறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் காயான் தர்சன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்தினை முன்வைத்தார்.  

மேலும் அவர் தெரிவித்ததாவது
 கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை வாழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாச எனும் நாமத்தை முன்னிறுத்தி 2 லட்சத்து 75 ஆயிரம் மேற்பட்ட வாக்குகளை சஜித் பிரேமதாச காலத்தில் தாங்கள் சஜித் பிரேமதாஸவின் ஆதரவளித்துள்ளனர்.

எமது கட்சி துடிப்புள்ள இளைஞர்களை புது யுக தலைமுறைக்கு பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியில் வெற்றி வாகை சூடி எமது சாதித்த இளையோர் போட்டியிடும் டெலிபோன் சின்னத்திற்கு வாக்களித்து அம்பாறையில அனைத்து மக்களும் வெற்றி பெறுவார்கள் என்பது அனைத்து மக்களின் என  கருத்து தெரிவித்தார். 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *