பிரதான செய்திகள்

கைது செய்யப்பட்ட இரண்டு கிராம உத்தியோகத்தர்கள்

யானையின் தந்தங்களை கொண்டு தங்க மாலையில் பாகங்களை அமைத்த இரு கிராம உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள், பொல்பிலிதிகம பிரதேசத்தில் வைத்து இன்றைய நேற்றைய  (02) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

32 வயது மற்றும் 42 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் மகுல்பொன கிராம உத்தியோகஸ்தராக கடமையாற்றிவருவதுடன், மற்றைய நபர் தொரவேருவ கிராம உத்தியோகஸ்தராக சேவையாற்றி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, தங்க மாலையில் தந்தத்தின் மூலம் பாகங்களை செய்துள்ளதாகவும், சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாராளுமன்ற தேர்தலின் பின்பு! வேலைவாய்ப்பு

wpengine

வவுனியாவில் காணி கோரிய 2000 குடும்பங்களின் பிரச்சனையை தீர்க்க துரித நடவடிக்கை..!

Maash

தமிழ்,முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்கும் செயற்பாடுகளை யாரும் முன்னேடுக்க வேண்டாம் மன்னாரில் அமைச்சர் றிஷாட்

wpengine