பிரதான செய்திகள்

வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளரின் இராஜினாமா அமைச்சரினால் நிராகரிப்பு

வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளரான ஜெனரல் சுமித் பிலபிட்டியவின் இராஜினாமா கடிதத்தை நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் திணைக்களத்தின் பணிப்பாளர் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதற்கு அமைவாக பணிப்பாளரின் இராஜினாமா கடிதம் நேற்று அமைச்சரிடம் கையளித்த வேளையில், அவரினால் நிராகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாகவும், பணிப்பாளர் சுமித் பிலபிட்டியவை குறித்த பதவியில் நீடிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருவதாகவும் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

09 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் ஊரடங்கு

wpengine

பெண்களை கௌரவிக்க ஷிரந்தியை விட சிறந்த விருந்தினரை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டுபிடிக்க முடியவில்லையா?

wpengine

கல்முனை சாஹிராக் கல்லுாாி கொழும்புக் கிளையின் அதிபா் நியமனம் பற்றிய கூட்டம்

wpengine