பிரதான செய்திகள்

வடக்கு மாகாண சபையின் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்

வடக்கு மாகாண சபையின் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“வடக்கு மாகாண சபைக்கு தற்போது உடனடி தேர்தல் அவசியமாக இருக்கின்றது. ஏனெனில் வடக்கு மாகாணம் தற்போது ஜனாதிபதியின் பிரதிநிதி ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது.

இந்நிலையில், அவர் அரசியல் நோக்கிலான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார். இது ஆரோக்கியமான ஒன்றல்ல. எனவே, வடக்கு மாகாண சபைக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்.

எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் உடனடியாக தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லையென முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பொதுஜன பெரமுனவில் இணைந்த முன்னால் அமைச்சர்

wpengine

மட்டக்களப்பு விவசாயியிடம் இலஞ்சம் பெற்ற கமநல உத்தியோகத்தர் கைது.!

Maash

இன,மத பேதமின்றிப் பணியாற்றுகின்றேன்! சிலர் என்னை ஊடகத்தில் போலி குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்கள் அமைச்சர் றிஷாட்

wpengine