பிரதான செய்திகள்

வட மாகாணத்தில் தமிழ் ஆளுநர்

மேல் மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லோகேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வடக்கு மாகாணத்திற்காக நியமிக்கப்படும் முதலாவது தமிழ் ஆளுநர் லோகேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே ஆளுநராக கடமையாற்றினார்.

மேலும் வடக்கு மாகாண ஆளுநர்களாக பதவி வகித்த எஸ்.பலிஹக்கார, ஏ.சந்திரசிறி, டிக்சன் சரத்சந்திர தேல, விக்டர் பெரேரா, மற்றும் மொஹான் விஜேவிக்ரம ஆகியோர் அரசியல் சம்பந்தமில்ல அரச மற்றும் படை அதிகாரிகளாவர்.

Related posts

சமகால முஸ்லிம் அரசியலும் உள்ளூராட்சித் தேர்தலும்

wpengine

ஆறுமுகம் தொண்டமானுக்கு சவால் விடுக்கும் வகையில் முரளிதரன் நுவரெலியாவில்

wpengine

வடகொரியாவை எச்சரித்த அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர்

wpengine