பிரதான செய்திகள்

முஸ்லிம்களை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டாம்.

இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தில் 99 வீதமானவர்கள் அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள் என்பதால், முஸ்லிம்களை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலர் செய்த குற்றத்திற்கு எதிராக தற்போது முஸ்லிம் மக்கள் எழுச்சி பெற்றுள்ளனர்.

சாய்ந்தமருது, மாவனெல்லை , கம்பளை போன்ற பிரதேசங்களில் சாதாரண முஸ்லிம் மக்களே, இஸ்லாமிய அடிப்படைவாதிகளை சட்டத்தின் பிடியில் சிக்க வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த சமூகத்தை மறுசீரமைப்பது அவசியம். இந்த துயரமான சந்தர்ப்பத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய கத்தோலிக்க சமூகம் அமைதியாகவும் பொறுமையாகவும் நடந்துக்கொண்டமையையும் பாராட்டத்தக்கது எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மஹிந்தவிடம் பணம் வேண்டியவர்கள் ஏன்? வட-கிழக்கு இணைப்புக்கு ஆதரவுகொடுக்க மாட்டார்கள்?

wpengine

பஸ்ஸில் பெண்ணை தாக்கிய பௌத்த பிக்கு! கைது

wpengine

இஸ்லாமிய சமய பாடங்களை ஒழுங்குறுத்துவதற்கான புதிய சட்டம்

wpengine