பிரதான செய்திகள்

முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பது சுற்றுநிரூபம்

2018 ஆம் ஆண்டில் அரசாங்க பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான சுற்றுநிரூபம் மற்றும் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை முதலாம் தரத்திற்கு சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான அடிப்படைத் தகைமைகளின் படி, முதலாம் தரத்தின் சமாந்தர வகுப்பொன்றிற்காக மொத்தம் 38 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

இவர்களின் ஐந்து பிள்ளைகள் யுத்த நடவடிக்கைப் பணிகளில் ஈடுபட்ட முப்படைகள், பொலிஸ் உறுப்பினர்களின் பிள்ளைகளில் இருந்தும் தெரிவுசெய்யப்படுவார்கள் என கல்வி அமைச்சின் சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

சமூகங்களுக்கிடையில் எந்தப்பிரச்சனைகளும் பிளவுகளும் வராமல் பாதுகாத்து வருகின்றோம்.

wpengine

அரசாங்கத்தின் தீர்க்கதரிசனம் அற்ற செயற்பாடுகளால் சோமாலியாவைப் போல பஞ்சம் ஏற்படலாம்.

wpengine

ராஜபக்சக்கள் குடும்பவாதத்தை கைவிடவில்லை: விஜித் விஜயமுனி சொய்சா

wpengine