பிரதான செய்திகள்

மன்னார்,வவுனியா வீதியில் மரத்தளபாட விற்பனை நிலையத்தில் தீ

வவுனியாவில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
வவுனியா, மன்னார் வீதியில் குருமன்காடு பகுதியை அண்மித்ததாக உள்ள மரத்தளபாட விற்பனை நிலையத்தில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் முயற்சியில் நகரசபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மரத்தளபாட விற்பனை நிலையத்தில் மரத்தளபாடங்கள், வெட்டுமரம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய இயந்திர சாதனங்கள் இருந்த நிலையிலேயே அவை எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கும் வியாபார நிலைய உரிமையாளர் அவற்றின் பெறுமதி 50 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என தெரிவித்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்டமையினால் வவுனியா – மன்னார் வீதியூடான போக்குவரத்து சுமார்ஒரு மணிநேரம் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது.

இருப்பினும் போக்குவரத்துபொலிசார் நிலமையை சீர் செய்தனர்.

குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரைகண்டுபிடிக்கப்படாத நிலையில் இது குறித்து வவுனியா பொலிசார் விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர்.

Related posts

தீக்காயங்களுடன் உயிரிழந்த முஸ்லிம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம்

wpengine

விவசாயிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி – MOP உர மூட்டையின் விலை 1000 ரூபாவால் குறைப்பு!

Editor

இஸ்ரேலின் பெண் பொலிஸ் தூப்பாக்கி சூடு! துருக்கி அதிபர் கண்டனம்

wpengine