பிரதான செய்திகள்

மன்னாரில் காணமல்போன மனநோயாளி! பொலிஸ் முறைப்பாடு

மன்னார் தேட்டவெளி ஜோசேப்வாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த இளைஞனின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மன்னார் விடத்தல் தீவை பிறப்பிடமாகவும், தேட்டவெளி ஜோசவாஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் அருள் ராஜ் வயது (33) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளதாக பெற்றோர் கடந்த திங்கட்கிழமை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பெற்றோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் பசில் நாடு திரும்பியதும் அரசாங்கத்திற்குள் பல பெரிய மாற்றங்கள்.

wpengine

அதிகாலை திருகோணமலை பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

wpengine

மன்னார்- முசலி பிரதேசத்தில் அதிகமான மாடுகள் களவு போகின்றது! உரிமையாளர்கள் விசனம்

wpengine