உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது

சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் இலத்தீன் அமெரிக்க பிரிவின் துணைத் தலைவர் டியாகோ சோடன் (Diego Dzodan) பிரேஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்தின் வட்ஸ் எப் மெசெஞ்சர் ஊடாக போதை பொருள் விற்பனை தொடர்பாக பரிமாற்றப்பட்ட தகவல்களை பொலிஸாருக்கு வழங்க மறுத்த குற்றசாட்டிலேயே இவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கொள்கையின் அடிப்படையில் தனக்கு அந்த தகவல்களை வழங்க முடியாது என டியாகோ சோடன் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

அதேவேளை இக்கைது தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியா ஆறு பேர்ச்க்கும் குறைவான அல்லது கூடிய காணிகளை பெயர் மாற்றம்

wpengine

சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிக்கை வெளியிடுவதில் நிர்வாக ஒழுங்குமுறை அவசியம்!-சுகாதார அமைச்சு-

Editor

மாணர்களுக்கான உயர் தர கல்வி வழி காட்டல்கருத்தரங்கு -2016

wpengine