பிரதான செய்திகள்

புத்தளம்,மன்னார் ,முல்லைத்தீவு கரையோர எச்சரிக்கை!

புத்தளம், மன்னார் ,காங்கேசன்துறை மற்றும்  முல்லைத்தீவு வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என வானிலை அவதான நிலையம்
எதிர்வுகூறியுள்ளது.


விசேடமாக மன்னார் வளைகுடா பிரதேசத்தில் காற்றின் வேகம் எதிர்வரும் 18 மணித்தியாலங்களுக்கு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த நிலையம்
வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த கடற்பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் என அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு , பொத்துவில் மற்றும் அம்பாந்தோட்டை வரையிலான
கடற்பகுதியில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60 கிலோமீற்றர் வரை
அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினரிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related posts

அத்தியாவசிய உலர் உணவுக்காக மாதாந்த சம்பளம் ஒதுக்கீடு

wpengine

இஸ்ரேல் பரக்க உள்ள 29 பெண்கள்..!

Maash

நிரந்தர நியமனம் கோரி கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

wpengine