பிரதான செய்திகள்

புதிதாக 20ரூபா நாணயம்! 70வது ஆண்டு நிறைவு

இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன்வினால் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இது இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு நாணயம் ஆகும்.

நாணயம் 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 05 மில்லியன் நாணயங்கள் எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி முதல் புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

துருக்கி இராணுவபுரட்சி தோல்வியானது, எதிரிகளுக்கு கிடைத்த படுதோல்வியாகும்.

wpengine

ஓட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு! அமைச்சர் றிஷாட் பங்கேற்பு

wpengine

ஹக்கீம் உண்மையினை வெளிப்படுத்த வேண்டும் இல்லையென்றால் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் துரோகி

wpengine