பிரதான செய்திகள்

பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானம்

பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் 400 ரூபாவாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாவாக உயர்த்தவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை சீருடை வழங்குவதில் நிலவிய திருட்டு மற்றும் மோசடிகளை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீருடைக்கான வவுச்சர் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து கோடிக்கணக்கான ரூபா பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளயுள்ளார்.

இதன்மூலம் வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வவுச்சர்களை இலகுவில் உரிய காலத்திற்குள் விநியோகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

சஜித்தை அச்சுருத்தும் டயானா!

Editor

தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – இரா.சாணக்கியன்!

wpengine

முல்லைத்தீவு,மன்னார்,வவுனியா மாவட்ட வாழ்வாதாரத்திற்கு கைத்தொழில் அமைச்சு நிதி ஒதுக்கீடு

wpengine