பிரதான செய்திகள்

பராமரிக்க பணமில்லாததால் “மக நெகும” திட்ட நிறுவனங்கள் கலைக்கப்படும்!-பந்துல-

மக நெகும திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கலைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், நிறுவனங்களை நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மக நெகும திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் கலைக்கப்படும். ஏனெனில் அவற்றை பராமரித்துச் செல்ல போதிய வருமானம் இல்லை. ஒன்றும் செய்வதற்கில்லை. வேலை செய்ய பணமில்லை. எனவே, அந்த நிறுவனங்களை பராமரிக்க முடியாது. அரசு நிறுவன சீர்திருத்தத்தின் கீழ் அந்த அந்த நிறுவனங்கள் கலைக்கப்படும். மக நெகும மற்றும் அதனுடன் தொடர்புடைய 4 நிறுவனங்களுமே இவ்வாறு கலைக்கப்படவுள்ளது.

Related posts

எரிபொருள் விலையினை குறைத்த நிதி அமைச்சு

wpengine

இலங்கையில் கால்பதிக்கும் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்கள்; பாரியளவில் விலைகள் குறையும் சாத்தியம்!

Editor

வடக்கில் போலி சான்றிதழ்! 2 அதிபர்கள் 18 ஆசிரியர்கள் நீக்கம்.

wpengine