பிரதான செய்திகள்

தாஜூதீன் கொலைக்கு இளங்ககோனும் பொறுப்புக் கூற வேண்டும்

றக்பி வீரர் வசீம் தாஜூதின் கொலை தொடர்பில் முன்னால் காவற்துறை மா அதிபர் என்.கே இளங்ககோனும் பொறுப்பு கூற வேண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த பிரஜைகள் அமைப்பின் இணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் சட்டதின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் ஏற்கனவே முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வழக்கொன்றில் ஆஜராகாத காரணத்தினால் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு பிடியாணை

wpengine

ஒரு மூடை உரத்திற்கு 2,500 ரூபா கட்டுப்பாட்டு விலை! ஜனாதிபதி அறிவிப்பு

wpengine

18.12.2016 இல், பேர்ண் மாநிலத்தில், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்”!

wpengine