பிரதான செய்திகள்

தாஜுதீன் கொலை: சட்ட வைத்திய அதிகாரியின் முன்பிணை நிராகரிப்பு

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதின் கொலை வழக்கில், முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவின் முன்பிணை கோரிக்கையை கொழும்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தாஜுதினின் சடலத்தின் பாகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தான் கைதுசெய்யப்படலாம் என்பதால், தனக்கு முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு நேற்று (வியாழக்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது, பிணை வழங்குவது விசாரணைக்குப் பாதகமாக அமையும் எனத் தெரிவித்த நீதவான், முன்பிணை மனுவை நிராகரித்து தீர்ப்பளித்துள்ளார்.

Related posts

2000ரூபா கிடைக்காதவர்கள் முறைப்பாடு செய்ய முடியும்.

wpengine

ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்த பெண் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளார்.

wpengine

2024 உயர்தர பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம் .

Maash