பிரதான செய்திகள்

தனியாரிடம் இரத்த பரிசோதனை செய்வதற்கு தடை

அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்கள், தனியார் பிரிவுகளில் இரத்த பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் தடைசெய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

இதற்கமைவாக, ஆய்வுகூடங்கள் இருக்கும் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் இரத்த பரிசோதனை உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படும் நோயாளர்கள் தனியார் பிரிவுகளில் இரத்த பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும்,

எனினும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறவரும் நோயாளிகள் தனியார் பிரிவுகளில் இரத்த பரிசோதனை செய்து கொள்வதை நிறுத்த முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐந்து அமைச்சர்களுக்கு எதிராக ஊழல், மோசடிகள் முறைப்பாடு

wpengine

ஞானசார தேரரின் வெளிநாட்டு கோரிக்கை நிராகரிப்பு

wpengine

இன்று ஒரே நாளில் மொத்தம் 32 இந்திய மீனவர்களும், 5 படகுகளும் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Maash