பிரதான செய்திகள்

ஞானசாரவுக்கான நீதிமன்றத் தடையுத்தரவு தற்காலிக நீக்கம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றத் தடையுத்தரவு தற்காலிக அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் புத்திக்க ஸ்ரீ ராகல இன்று, தற்காலிக அடிப்படையில் தடையுத்தரவினை நீக்கியுள்ளார்.

ராஜகிரிய நாவல வீதியில் வீதிச் சோதனைச் சாவடியில் போதைப் பொருள் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அச்சுறுத்தியதாகவும் ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 6ம் திகதி முதல் 21ம் திகதி வரையில் ஜப்பானின் சுகுபா சம்போதி விஹாரையில் நடைபெறவுள்ள தர்ம உபதேச நிகழ்வில் பங்கேற்பதற்காக அனுமதிக்குமாறு ஞானசார தேரர், சட்டத்தரணிகள் ஊடாக கோரியிருந்தார்.

தற்காலிக அடிப்படையில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை நீதிமன்றம் நீக்கியதுடன், அது குறித்து குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Related posts

பயங்கரவாத அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளது! பாதுகாப்பு அமைச்சு

wpengine

சர்வதேச தரப்புடன் தீவிரமாக கலந்துரையாடல்! யூரியா உரத்தினை வழங்க  உலக வங்கி இணக்கம்

wpengine

போனஸ் ஊடாக பாராளுமன்றம் செல்லும் ரணில்- அர்ஜூன ரணதுங்க

wpengine