Breaking
Fri. May 17th, 2024

பயங்கரவாத தாக்குதல் குறித்து அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி இலங்கை தொடர்பான பயண அறிக்கையில் அமெரிக்காவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வகையில் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும்,

அமெரிக்க வெளியுறவுத்துறையினால் வழக்கமாக வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 4ஆம் நிலை பிரிவு பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

கோவிட் – 19 அவசர நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக இவ்வாறான அமெரிக்க பயண ஆலோசனை வழங்கப்படுகிறது என்ற போதிலும் இந்த எச்சரிக்கையில் பயங்கரவாத அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளது.

அத்துடன், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் இலங்கை தொடர்பில் நிலை 3 முதல் நிலை 4 வரையிலான பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டில் நிலவும் கோவிட் – 19 நிலைமை கருதி வழங்கப்படுகிறது.

இதேவேளை பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகளின் பிரகாரம் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தற்போது எந்த அறிக்கையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *