செய்திகள்பிரதான செய்திகள்

சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்தியர்கள் கொண்ட குழு கைது ..!

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்தியர்கள் கொண்ட குழு நேற்று (10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாகத்தில் இருந்து இந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தக் குழு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நாட்டிற்கு வந்திருந்தது. அவர்களில், 17 பேர் சுற்றுலா விசாக்களிலும், நான்குப் பேர் குடியிருப்பு விசாக்களிலும், ஒருவர் வணிக விசாவிலும் வந்திருந்தனர்.

குடிவரவு புலனாய்வுப் பிரிவினால் சந்தேகத்திற்கிடமான இரண்டு இந்தியர்களிடம் திடீரென நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் கைது நடவடிக்கைகளைத் தொடங்கினர்.

இந்த நபர்கள் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று நம்பப்படுகிறது.

அவர்கள் தற்போது மிரிஹானாவில் உள்ள தற்காலிக தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மேலும் உடனடியாக இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளனர்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தனை சந்தித்த மகாநாயக்க (படம்)

wpengine

12ஆம் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான விடுமுறை

wpengine

ඉස්ලාම් අන්තවාදය ලෝකෙටම පිළිකාවක් වෙලා. දැන්ම අතුගා නොදැම්මොත් දුක් විදින්නේ අනාගත පරපුරයි

wpengine