(அமைச்சரின் ஊடகப் பிரிவு)
ஆகியவற்றுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு கைவினைப் பொருட்களை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை இன்று காலை (2017.03.06) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பேரவையின் தலைவி ஹேஸானி போகொல்லாகம தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன், கல்வியமைச்சர் அகில விராஜ்காரியவசம் ஆகியோர் பங்கேற்றனர். 

கடந்த வருடம் அருங்கலைகள் பேரவை நடைமுறைப்படுத்திய முதல் கட்ட வேலைத்திட்டத்தில் நாடாளவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 40000 மாணவர்கள் பங்கேற்று பயிற்சிகளை பெற்றிருந்தனர். பயிற்சி பெற்றவர்களில் தெரிவுசெய்யப்பட்ட, மிகவும் நேர்த்தியான 800 மாணவர்கள் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
