தொழில்நூட்பம்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கூகுள் கோட் இன் – 2019 இந்துக் கல்லூரி மாணவன் முதலாமிடம்

சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட கூகுள் கோட் இன் – 2019 ( Google Code-In 2019) போட்டியில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் நித்தியானந்தன் மாதவன், ஒரு பிரிவில் முதலிடத்தை (Grand Prize Winner பட்டம்) பெற்றுள்ளார்.


இந்தப் போட்டியில் 76 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 566 மாணவர்கள் பங்கேற்றனர். 29 திறந்த மூல நிறுவனங்களுடன் 20 ஆயிரத்து 840 பணிகள் (tasks) வழங்கப்பட்டன.


இதில் Apertium என்ற மென்பொருள் தொடர்பில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயிரியல் பிரிவு மாணவன் நித்தியானந்தன் மாதவன் முதலிடத்தைப் பெற்று Grand Prize Winner பட்டம் வென்றுள்ளார்.


இவருக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் ஜூன் மாதம் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

8மாத காலப்பகுதியில் 8கோடிக்கு மேற்பட்ட தொலைபேசி பாவனை

wpengine

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதல்

wpengine

“மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி

wpengine