உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கலிபோர்னியாவில் பதாவை நீக்கிய பொலிஸ்! பெண்ணுக்கு இழப்பீடு

அமெரிக்காவில் இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை பொலிசார் நீக்கிய குற்றத்திற்காக அப்பெண்ணிற்கு 85,000 டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் Kirsty Powell என்ற இஸ்லாமிய பெண் வசித்து வருகிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஒரு விசாரணைக்காக அந்த இஸ்லாமிய பெண்ணை பொலிசார் Long Beach காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது, அவர் அணிந்திருந்த பர்தாவை நீக்குமாறு பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.

‘யாரும் இல்லாத ஒரு இடத்தில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் தான் தனது பர்தாவை நீக்க வேண்டும்’ என அப்பெண் முறையிட்டுள்ளார்.

ஆனால், பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த ஒரு ஆண் பொலிஸ் அதிகாரி அவருடைய பர்தாவை கட்டாயப்படுத்தி நீக்கியுள்ளார்.

 

பிற பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைக்கைதிகள் முன்னிலையில் தனது பர்தா நீக்கப்பட்டதால் அவர் மிகவும் வருந்தியுள்ளார்.

மேலும், இரவு முழுவதும் அவர் பர்தா இல்லாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். மறுநாள் காலையில் விசாரணை முடிந்ததும் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

ஆனால், காவல் நிலையத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை கண்டித்து அவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 85,000 டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் தனியான ஒரு இடத்தில் பெண் பொலிஸ் அதிகாரி மட்டுமே இஸ்லாமிய பெண்களின் பர்தாவை நீக்க வேண்டும்’ எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related posts

தலைவர்களின் பிள்ளைகள்  வெளிநாடுகளில் நாட்டில் உள்ள பிள்ளைகள் தொடர்பில் அக்கறை இல்லை

wpengine

அரசாங்கம் பதவியை பாரமெடுத்ததன் பின்னர் 70க்கு மெல் மனிதப் படுகொலைகள்..! ஹக்கீம் எம் . பி .

Maash

அமைச்சர் றிஷாட் தபால் அமைச்சரனால் என்ன நடக்கும்! பெருநாள் தினத்தில் நீர் வெட்டு ஏற்படுமா?

wpengine