பிரதான செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் காலி பேரணியில் கலந்து கொள்ள மாட்டார்கள்!

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிருளப்பனை மே தின ஊர்வலம் உழைக்கும் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறந்த மே தின ஊர்வலம் என, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் கிருளப்பனையில் இடம்பெறும் இந்த மே தின ஊர்வலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயம் கலந்து கொள்வார் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் காலியில் இடம்பெறவுள்ள மே தின ஊர்வலத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார்.

Related posts

அமைச்சர் றிஷாட்டை பழி தீர்க்க இனவாதிகளுடன் ஒன்று சேர்ந்த முஸ்லிம் தலைமைகள்

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல்களை அம்பலப்படுத்திய பிள்ளையான் ! – அமைச்சர் ஆனந்த விஜேபால

Maash

ஐக்கிய தேசிய கட்சி அச்சமடைவதில்லை

wpengine