பிரதான செய்திகள்

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் ஜனாதிபதி நேற்று (21) இரவு நாட்டை வந்தடைந்ததாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்..

ஜனாதிபதியுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்து கொண்ட தூதுக் குழுவும் இலங்கைக்கு வந்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முசலி நில மீட்பு போராட்டத்தை காட்டிக்கொடுத்து,மலினப்படுத்துவதற்கு துணை-அமைச்சர் றிஷாட் ஆவேசம்

wpengine

ஆளுநர் பதவிக்கு தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை

wpengine

எரிபொருள் விலை குறைக்கப்பட்டது!

Editor