பிரதான செய்திகள்

அரசாங்கத்திற்காக பேசும் அமைச்சர் ஹக்கீம்! முஸ்லிம்களை பிரிக்க சதி

முஸ்லிம் மக்களை இந்த அரசாங்கத்துக்கு எதிராக திசை திருப்பும் நோக்கில் திட்டமிட்ட வகையில் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், இதனை அரசாங்கத்தை வீழ்த்தும் நடவடிக்கையாகவே தாம் பார்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை, குறைபாடு இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எந்தவொரு சமயத்தையோ அல்லது சமயத் தலைவரையோ விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து பொலிஸார் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Related posts

300 பிக்குகள் யாழ் வருகை நயீனாதீவில் பூஜை வழிபாடு

wpengine

இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம்: ஃபிடல் கெஸ்ட்ரோ உணர்ச்சிகர உரை

wpengine

ACMC மற்றும் SJB உடன்படிக்கையில் தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு.

Maash