பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டிற்கு எதிரான சவால் நான் பார்த்துகொள்ளுகின்றேன் பிரதமர் தெரிவிப்பு

அமைச்சர் ரிஷாதுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்க சவாலை பொறுப்பேற்றுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற முஸ்லிம் அமைச்சர்களுடான கலந்துரையாடலில் அவர் முஸ்லிம் எம்பிக்களிடம் நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தினை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது.

அமைச்சர்கள் றிஷாத் ,ஹக்கிம் , ஹலீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பிரதமரை அலரி மாளிகையில் சந்தித்து பேசியுள்ளனர்.

இதன்போதே பிரதமர் முஸ்லிம் எம்பிக்களிடம் இதனை குறிப்பிட்டுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

வட, கிழக்கு மக்களின் காணி, மீள்குடியேற்ற பிரச்சினை! 24ஆம் திகதி விசேட கூட்டம்

wpengine

அமெரிக்காவை மீண்டும் மிரட்டுகிறது வட கொரியா; நீர் மூழ்கி அணு ஏவுகணை வெற்றிகரமாக பரிட்சிப்பு

wpengine

கண்டி வன்முறைக்கு கூகுளில் தேடிய இனவாதிகள்

wpengine