பிரதான செய்திகள்

யாழ்- மன்னார் வீதியில் வாகன விபத்து! பொலிஸ் அதிகாரி மரணம்

யாழ்ப்பாணம்-  மன்னார் பிரதான வீதியின் சங்குப்பிட்டி பிரதேசத்தில் டிப்பர் வண்டி ஒன்று, பொலிஸ் கான்ஸ்டபில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் பலியாகியுள்ளார்.  

யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 48 வயதான கான்ஸ்டபில் ஒருவரே இதன்போது பலியாகியுள்ளார்.

கான்ஸ்டபிளின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பூநகரி பொலிஸார்  விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர்.

Related posts

வவுனியா நீர்ப்பாசன கழிவு வாய்க்கால்களை புனரமைக்க கோரிக்கை

wpengine

வீதி விபத்துக்களை நிறுத்துவதற்கு எதிரான அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

wpengine

நாட்டுக்குள் சிக்கலான பல பிரச்சினைகள் எழுந்துள்ளன: மாநாயக்க தேரர்

wpengine