பிரதான செய்திகள்

பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானம்

பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் 400 ரூபாவாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாவாக உயர்த்தவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை சீருடை வழங்குவதில் நிலவிய திருட்டு மற்றும் மோசடிகளை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீருடைக்கான வவுச்சர் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து கோடிக்கணக்கான ரூபா பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளயுள்ளார்.

இதன்மூலம் வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வவுச்சர்களை இலகுவில் உரிய காலத்திற்குள் விநியோகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

அபிவிருத்தி வேலை திட்டங்களை பார்வையிட்ட அமைச்சர் பா.டெனிஸ்வரன்

wpengine

யாழில் தொற்று இல்லாதவர்களின் கடைகளைத் திறக்க அனுமதி!

Editor

மன்னாரில் இன்று 9 மணி நேர நீர் வெட்டு

wpengine