பிரதான செய்திகள்

பாகிஸ்தான்,சியல்கோட் சம்பவத்துக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்!

பாகிஸ்தான், சியல்கோட்டில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்கு மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“பாகிஸ்தான், சியல்கோட்டில், இலங்கையரான பிரியந்த குமார தியவதனவை கொடூரமாக எரித்து, படுகொலை செய்தமை சகித்துக்கொள்ள முடியாத, கண்டிக்கத்தக்கதும் வெறுக்கத்தக்கதுமான குற்றமாகும்.

சியல்கோட்டைச் சேர்ந்த ஒரு கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொடூரமான செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மேலும், குற்றவாளிகளை கைது செய்வதற்கு கௌரவ.பிரதமர் இம்ரான் கான் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளுக்கு, எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.”

Related posts

ஞானசார தேரர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படலாம் -டிலாந்த விதானகே

wpengine

வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு உபகரணங்களை வழங்கிய முன்னால் அமைச்சர்,சஜித்

wpengine

போலியான குற்றச்சாட்டு அமைச்சர் றிஷாட் சி.ஐ.டி முறைப்பாடு

wpengine