பிரதான செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி உதயம் (விடியோ)

தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி என்ற புதிய அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றது.

நல்லாட்சி அரசாங்கத்துடன் இருக்கின்ற, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று சொல்லக் கூடிய தமிழ் அரசியல்வாதிகள் மௌனித்து போயிருப்பதாக இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஆகவே இந்த அமைப்பின் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக, அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் கூறினார்.

இந்த அரசியல் சூழ்நிலையில் இன்று தமிழ் மக்களுக்கு எதிரான பல விடயங்கள் மறைமுகமாக நடந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

Related posts

மன்னார் வலயக்கல்வி பணிமனையில் ஒளி விழா

wpengine

உளநலம் மருந்து அதிகபாவனை சிறையில் வெட்டிகொலை

wpengine

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு: அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

wpengine