பிரதான செய்திகள்

ஆளும் கட்சியில் இணைய அழைப்பு! என்னுடன் எவரும் கலந்துரையாடல் நடத்தவில்லை.

தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பிக்களுக்கு ஆளுங்கட்சி அழைப்பு விடுத்துள்ளமையை முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. ஒப்புக்கொண்டுள்ளார்.


இது தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பிக்களுக்கு ஆளுங்கட்சி பக்கத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

அரசியலில் இவ்வாறு பேச்சு நடைபெறுவது இயல்பு.


ஆனாலும், என்னுடன் எவரும் கலந்துரையாடல் நடத்தவில்லை.


ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டணியில்தான் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் அங்கம் வகிக்கின்றது. நாம் ’20’ ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதற்கு முடிவெடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தை பொங்கல் வாழ்த்து தெரிவித்த அங்கஜன் ராமநாதன் (பா.உ)

wpengine

பூரணத்துவமான வதிவிட மனைப் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் மன்னார் நகரில்

wpengine

மன்னார் மது விற்பனை நிலையத்தில் தரமற்ற மது! நகர சபை தவிசாளர் அதிக கவனம்

wpengine