Breaking
Wed. May 8th, 2024

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனோ வைரஸ்தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இந்நிலையில் அமெரிக்கா, டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்கள் விசேட விமானங்களின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.


அந்தவகையில் நாடு திரும்பிய 300க்கும் மேற்பட்டோர் வவுனியா வேலங்குளம் மற்றும் பம்பைமடு இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.


இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 12 பேருக்கும், வவுனியா விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 20 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.


பரிசோதனை முடிவுகளின்படி பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *