பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில்! மன்னார் தவிசாளரை பேசவிடாமல் தடுத்த காதர் மஸ்தான் பா.உ

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் கூட்டம் இன்று (10) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது மக்களின் பிரச்சினைகள் பற்றி பேச மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் வந்தபோது பாராளுமன்ற காதர் மஸ்தான் தடுத்துள்ளார் என அறியமுடிகின்றன.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் தவிசாளரை பேசவிடாமல் தடுத்த போது தவிசாளருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்குமிடையில் கலப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச தவிசாளருக்கு இடம்கொடுக்காமல் இருப்பது மிகவும் பாரிய குற்றமான விடயம் என்ற விடயத்தை கூட பாராளுமன்ற உறுப்பினர் அறியமுடியாமல் இருப்பது அவரின் அரசியலில் அறியாமையினை காட்டுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினரின் இந்த நடவடிக்கை காரணமாக மக்கள் பிரச்சினைக்கான தீர்வுகளை உறிய முறையில் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டாதாகவும் தெரிவிக்கின்றன.

இன்னும் முன்னால் அமைச்சர் றிஷாட் பதியுதீன் வேண்டுகோளின் பேரில் கொண்டுவரப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களையும்,நிதிகளையும் ஓடுக்கும் வேளையில் இந்த பாராளுமன்ற உறுப்பினர் செயற்படுவதாகவும் அறியமுடிகின்றன.

Related posts

கல்முனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக இடமாற்றலை நியாயப்படுத்தும் ஹக்கீமின் நியாயம் நியாயமானதா?

wpengine

முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாத செயற்பாடுகள்! அவுஸ்திரேலிய தூதுவரிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் றிஷாட்.

wpengine

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன் திறந்து வைத்த தரிப்பிடத்தின் அவலநிலை

wpengine