பிரதான செய்திகள்

ராஜபக்ஷ அலைபேசி செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுனர் பசில் ராஜபக்ச அலைபேசி செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளார்.


எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த செயலி ஊடாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது.

வீ கென் (V Can) என்ற பெயரில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக சென்று தகவல்களை திரட்டி தற்போதைய அரசாங்கத்தின் குறைகளை கேட்டறிந்து செயலியில் தகவல்கள் உள்ளீடு செய்யப்பட உள்ளது.

இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறானா ஓர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்முனை பிரதேச செயலக விவகாரம்; அமைச்சர் றிஷாட்டை ஹரீஸ் எம்.பி மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு!

wpengine

யாழ். மாவட்டத்தின் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி வேட்பு மனு தாக்கல்.

Maash

சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி

wpengine