பிரதான செய்திகள்

மன்னார் மறை மாவட்ட ஆயரை சந்தித்த தூதுவர்

மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை, பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தித்துள்ளார்.
குறித்த விசேட சந்திப்பானது நேற்று மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது மன்னார் மாவட்ட மனித புதை குழி தொடர்பாகவும், காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகள் தொடர்பாகவும், இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வரலாற்று சிறப்பு மிக்க மடு அன்னையின் திருத்தலத்திற்கு உயர்ஸ்தானிகர் விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றவேண்டாம்

wpengine

மாட்டுக்கறி உண்பவர்களை நடு வீதியில் தூக்கிலிட வேண்டும்! சாமியாருமான சாக்‌ஷி சரஸ்வதி

wpengine

தலைமன்னாரில் மீனவர்களுக்கு காப்புறுதி பணம் வழங்கி வைப்பு

wpengine