பிரதான செய்திகள்

வியாழேந்திரன் எம்.பி பொய்யான பிரச்சாரம் மேற்கொள்ளுகின்றார்.

ஏறாவூர்ப்பற்று, பெரிய புல்லுமலையில் அமைக்கப்படுகின்ற குடிநீர் போத்தல் உற்பத்தி தொழிற்சாலை விவகாரம் தொடர்பில் வியாழேந்திரன் எம்.பி பொய்யான பிரச்சாரம் செய்து மக்களை குழப்புவதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,

இந்த விவகாரத்தில் எவ்வித சம்பந்தமும் இல்லாத என்னை தொடர்பு படுத்தி விசமத்தனமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் தொழிற்சாலை அமைப்பதற்காக எந்த ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருக்கவில்லை.

குறித்த தொழிற்சாலை சட்டத்திற்கு முரணாக அமைக்கப்படுவதாக கூறுபவர்கள் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் தமது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் திங்கட்கிழமை பெரிய புல்லுமலையில்
ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்ததாக செய்திகள் ஊடாக அறிந்து கொண்டேன்.
இந்த விவகாரம் சம்பந்தமாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை அவர் பரப்பியுள்ளனர்.

அத்துடன் இதில் என்னையும் தொடர்பு படுத்தி விசமத்தனமான பிரச்சாரங்களை ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த காணி தமிழர்களுக்கு சொந்தமானது எனவும், அதனை முஸ்லிம்கள் அபகரித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது குற்றம் சாட்டியிருந்தனர்.

இது சம்பந்தமாக நான் சம்பந்தப்பட்ட முஸ்லிம் தரப்பினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடினேன்.
இந்த காணி முஸ்லிம்களது சொந்த பூர்வீகக் காணி எனவும், 100 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட காணி எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தொழிற்சாலை நிர்மாணிக்கும் உரிமையாளர் தரப்புடன் நான் பேசியபோது அவர்கள் இந்த வேலைத்திட்டம் சகல அரச திணைக்களங்கள், செயலகங்கள் ஊடாக அனுமதி பெறப்பட்டு சட்டரீதியாக மேற்கொண்டுள்ளதாகவே கூறுகின்றனர்.

எனவே, குறித்த தொழிற்சாலை சட்டத்துக்கு முரணாக அமைக்கப்படுவதாக கூறுபவர்கள் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் ஊடாக தமது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

இந்த வேலைத்திட்டம் பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார அமைச்சு, சுற்றாடல் திணைக்களம் என சகல அரச திணைக்களங்கள், செயலகங்கள் ஊடாக அனுமதி பெறப்பட்டு சட்டரீதியாக மேற்கொள்ளப்படுவதாக அதன் உரிமையாளர்கள் ஆவணங்களைக் காண்பித்துள்ளனர்.

இந்த வேலைத்திட்டத்தை மேற்கொள்ள நான் எந்த ஒத்துழைப்பும் வழங்கியது கிடையாது.

பொறுப்பு வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் பதவி என பல பொறுப்புக்களில் உள்ள வியாழேந்திரன் எம்.பி. தொடர்ந்தும் இவ்வாறு பொய்யான கருத்துக்களை பரப்புவதன் மூலம் இரு
சமூகங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த முற்படக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இந்தோனேசியாவில் தேவாலயத்தை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்!

Editor

Unlimited இணைய வசதிகள்! Package களுக்கு அனுமதி

wpengine

ஜனநாயகத்தை நிலைநாட்டும் தீர்ப்பாக அமைய வேண்டுமென பிரார்த்தியுங்கள்” ரிஷாட் பதியுதீன்

wpengine