பிரதான செய்திகள்

முசலி பிரதேச செயலாளர் விபத்து! மன்னார் வைத்தியசாலையில் அனுமதி

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் நேற்று மாலை 7 மணியலவில் விபத்துக்குள்ளாகி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

மாலை நேரத்தில் சிலாவத்துறையில் இருந்து மரிச்சிக்கட்டி செல்லும் பிரதான வீதிக்கு அருகாமையில் பிரதேச செயலாளர் மற்றும் இன்னும் சில ஊழியர்களும் உடற்பயிற்சி கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் கொக்குப்படையான் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கில் வேக கட்டுபாட்டை இழந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிரதேச செயலாளர் மற்றும் ஊழியர்கள் மீது மோதியதாகவும் அறியமுடிகின்றது.

அதன் பின்பு சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரதேச செயலாளர் மற்றும் ஊழியர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கின்றன.

Related posts

மொராக்கோவில் புர்கா தயாரிப்பு, இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை

wpengine

அரசாங்கத்திற்கு எதிராக களம் இறங்க உள்ள முத்தட்டுவே ஆனந்த தேரர்

wpengine

நோன்பு குறித்த சுற்றறிக்கைக்கு முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன?

Editor