பிரதான செய்திகள்

மன்னாரில் ஆட்டோ விபத்து

மன்னார் – மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியின் உள் வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று மதியம் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரியபண்டிவிரிச்சான் உள் வீதியில் கட்டுப்பாட்டை மீறி முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சாரதி உட்பட முச்சக்கரவண்டி பயணம் செய்த இருவருமே காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

Related posts

நாட்டில் 6 மாதங்களில் 23 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

Editor

வன்னியில் சிரமமின்றிய வெற்றியில் வெளிப்படும் றிஷாதின் ஆளுமையும், வெற்றிக்கு சாதகமாகும் களமும்

wpengine

10 பங்காளி கட்சிகள் தனியாக செயற்பட விமல்,கம்பன்வில நடவடிக்கை

wpengine