Breaking
Sun. May 12th, 2024

முன்னாள் திறப்பனை பிரதேச தலைவர் முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் தொடர்ச்சியாக திறப்பனை பிரதேசத்தின் பல பாகங்களிலும் பாதைகள் செப்பனிடும் பணிகள் நடைபெற்றுவருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் இன்று புதன்கிழமை பமுனுகம சந்தி தொடக்கம் அமுநிச்ச கிராமம் வரையான பாதை செப்பனிடும் பணி இன்று ஆரம்பமானது.

மிகிந்தலை தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் சட்டத்தரணி சஞ்சீவ செனவிரத்ன மற்றும் முன்னாள் திறப்பனை பிரதேச தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இணைந்து செயற்படுத்தும் இச்செயற்றிட்டத்திற்கு சுமார் 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சேவைகள் பற்றி அப்பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில் “தேர்தல் காலங்களில் மட்டும் ஓரிரு சேவைகளை மக்களுக்கு காட்டி வாக்குகளை கொள்ளையடிக்க எத்தனிக்கும் அரசியல் வாதிகள் மத்தியில் தனது அயராத முயற்சியால் தன்னால் இயன்ற அனைத்து சேவைகளையும் மக்கள் நலனை கருத்திற்கொண்டு முன்னாள் திறப்பனை பிரதேச தலைவர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் செயற்படுவது மிகவும் பாராட்டக்கூடிய விடயமே” என்று தெரிவித்தார்கள்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *