பிரதான செய்திகள்

50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைய முடியாதவாறு உத்தரவு-கோட்டை நீதவான்

காலி முகத்திடலில் பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள இடத்தில் இருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் பிரவேசிக்கக் கூடாது என கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோட்டை பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பொலிஸார், குறித்த சிலையை சேதப்படுத்தும் திட்டம் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைய முடியாதவாறு உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Related posts

வியட்நாமில் கூட்டுறவு துறையாளர்களின் வர்த்தக சந்தை அமைச்சர் றிஷாட் பங்கேற்பு

wpengine

அனர்த்த பாதிப்பு பகுதிகளில் தொடர்ந்தும் அசா­தா­ரண நிலை மீட்பு, நிவா­ரண பணிகள் துரிதம்

wpengine

மன்னார் ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்கள் பணிப்பகிஸ்கரிப்பு

wpengine