பிரதான செய்திகள்

4 அரசியல் கட்சிளுக்கு தேர்தல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு!

கணக்கறிக்கைகளை கையளிக்காத 4 அரசியல் கட்சிகளை இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.

கணக்கறிக்கைகளை கையளிக்குமாறு பல தடவைகள் குறித்த அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், கணக்கறிக்கைகளுடன் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

சாரதிகளின் தவறுகளை சுட்டிக்காட்ட விசேட செயலியை அறிமுகப்படுத்த SLTB தீர்மானம்!

Editor

மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி.

wpengine

18 தொடக்கம் 21வரை வேட்பு மனு தாக்கல்

wpengine