பிரதான செய்திகள்

4 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற உயர் அதிகரிகள் இருவர் கைது!

4 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற அவிசாவளை மாநகர சபையின் பதில் செயலாளரும், வருவாய் பரிசோதகரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இன்று (23) குறித்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை பேருந்து நிலைய புதிய வர்த்தக கட்டிடத் தொகுதியில் வா்த்தகம் நிலையம் ஒன்றின் உாிமையை விரைவாக வழங்குவதற்காக இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

அவிசாவளை மாநகர சபையினுள் இலஞ்சம் பெறும் போதே குறித்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

மரணிப்போரின் சடலங்களை மீள் பரிசீலனை செய்யவேண்டும்

wpengine

மூங்கில் உற்பத்திக் கைத்தொழிலை பலப்படுத்துவோம்! பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட்

wpengine

21 வீராங்கனைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நிதி வழங்கி வைப்பு

wpengine